பொந்தியான், செப்.21 —
பொந்தியான் கெச்சில், ஜாலான் தம்பாக்–பொந்தியான் கெச்சில் அருகிலுள்ள மீனவர்கள் துறைமுகத்தில், படகின் இயக்கச் சக்கரத்தைபச் (propeller)சுத்தம் செய்துக் கொண்டிருந்தபோது கடலில் விழுந்து 65 வயது உள்ளூர் நபர் ஒருவர் உயிரிழந்தார்.
பொந்தியான் தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினருக்கு மதியம் 12.02 மணிக்கு அவசர அழைப்பு வந்தது. இதையடுத்து 17 பேர் கொண்ட மீட்பு அணி, அலுமினிய படகு, இரண்டு நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் குளுவாங் நீர்மூழ்கி மீட்பு பிரிவின் உதவியுடன் தேடுதல் பணி தொடங்கப்பட்டது.
சுமார் மூன்று மணி நேர தேடுதலுக்குப் பின், மதியம் 3.25 மணிக்கு துறைமுகத்திலிருந்து 10 மீட்டர் தூரத்தில் மிதந்து கொண்டிருந்த நிலையில் உடல் கண்டுபிடிக்கப்பட்டது.
உடல், நண்பர்களின் உதவியுடன் மீட்பு குழுவினரால் கரைக்கு கொண்டு வரப்பட்டு பின்னர் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
அந்த நபர் எவ்வாறு கடலில் விழுந்தார் என்பதற்கான காரணம் இதுவரை தெளிவாகவில்லை. போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *