இந்து சேவை சங்கம் மற்றும் மலேசிய பரம்பொருள் இயக்கம் இணைந்து “ஞான வேள்வி 2025 – வேதாந்தம்: ஓர் அறிமுகம்” என்ற சிறப்புநிகழ்வை நடத்தவுள்ளனர். இந்த நிகழ்ச்சி வரும் 13 செப்டம்பர் 2025 (சனிக்கிழமை) முதல் 15 செப்டம்பர் 2025 (திங்கட்கிழமை) வரை, சிலங்கூர் மாநிலம் பத்து மலையில் அமைந்துள்ள ஸ்வாமி சிவானந்தா ஆசிரமத்தில் நடைபெற உள்ளது.
பங்கேற்பாளர்கள் 13 செப்டம்பர் (சனிக்கிழமை) காலை 10.00 மணிக்கு வருகை பதிவு செய்ய வேண்டும்.
நிகழ்ச்சிக்கான பங்கேற்பு கட்டணம் RM100.00 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் தங்கும் வசதி, உணவு மற்றும் பாட குறிப்புகள் வழங்கப்படும்.
பயிற்சி தமிழில் நடைபெறும்; பாட குறிப்புகள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வழங்கப்படும்.
பங்கேற்பதற்கான பதிவு இணைப்பு: https://forms.gle/h6TWx4tFo3EseMbe9

















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *