தென்கிழக்காசியாவில் தமிழர் பண்பாடு – ஓர் அறிவார்ந்த விவாதம்- ஜாவாலேன் தமிழ்ப்பள்ளியில்
வரும் 5.9.2025 (வெள்ளிக்கிழமை – பொதுவிடுமுறை) பிற்பகல் 2.00 மணிக்கு, சிறம்பான் லோரோங் ஜாவா தமிழ்ப்பள்ளி மண்டபத்தில் ஒரு சிறப்பான நிகழ்ச்சி நடைபெறவிருக்கிறது.
கருவின் பிரபஞ்ச மையம் ஏற்பாடு செய்துள்ள இந்த நிகழ்ச்சியில், நாவலாசிரியர் எம். மதியழகன் எழுதிய “சம்பா நாட்டு இளவரசி” எனும் வரலாற்று நாவலில் இடம்பெற்றுள்ள வரலாற்றுக் குறிப்புகள் குறித்து, “அறிவார்ந்த விவாதம்” என்ற தலைப்பில் விரிவான உரையாடல்கள் இடம்பெறுகின்றன.
இந்த நாவல் தென்கிழக்காசியாவின் முக்கிய வரலாற்றை மையமாகக் கொண்டு எழுதப்பட்டிருப்பதால், வரலாற்று ஆய்வாளர்கள், இலக்கியவாதிகள் மற்றும் வாசகர்கள் மத்தியிலும் சிறந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.
முக்கிய நிகழ்வுகள்
- சிறம்பான் ஜெயா சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு திரு. பி. குணசேகரன் (பி. குணா) அவர்கள் திறப்புரை வழங்குவர்.
- ராகா வானொலி புகழ் அறிவிப்பாளரும் திரைக்கலைஞருமான உதயா சிறப்புப் பேச்சாளராகக் கலந்து கொள்கிறார்.
- இளம் வாசகர்கள் திவாகரன், கீர்த்தனா, டிலாஷினி, ஹர்விந்த் ரெட்டி ஆகியோர் தங்கள் வாசிப்பு அனுபவங்களை பகிர்ந்து விவாதங்களை முன்வைப்பர்.
- எழுத்தாளர் எம். மதியழகன் உடன் உரையாடல் அங்கமும் நடைபெறும்.
பொதுமக்கள் பங்கேற்பு
இந்நிகழ்ச்சியில் பொதுமக்கள், வாசகர்கள், இலக்கிய ஆர்வலர்கள், இடைநிலைப்பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், தமிழ் ஆர்வலர்கள் என அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு பயன் பெறுமாறு ஏற்பாட்டுக் குழுவின் சார்பில் கருவின் பிரபஞ்ச மையத் தலைவர், எழுத்தாளர் எம்.கே. கருணாகரன் கேட்டுக் கொள்கிறார்.
சிறப்பு அறிவிப்பு
நிகழ்ச்சியன்று, வருகையாளர்கள், எழுத்தாளர் எம். மதியழகன் மற்றும் ராகா உதயா ஆகியோரிடமிருந்து நாவலை நேரடியாக வாங்கிக் கொள்ளலாம்.
தொடர்பு எண்கள்
- திரு. கருணாகரன் : 011-1078 2750
- திரு. எம். மதியழகன் : 012-638 7901
 
																				



















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *