அமெரிக்காவை விட 200 மடங்கு வேகம்” – பெருங்கடல்களை ஆள தயாராகும் சீனா!

டாலியன், சீனா — உலகின் கடற்படை சக்தி சமநிலையில் பெரும் அதிர்வலைகளை எழுப்பும் வகையில், சீனா அதிவேகமாக கப்பல்கள் கட்டி வருகிறது. அமெரிக்காவை விட 200 மடங்கு வேகத்தில் நடைபெறும் இந்த கப்பல் கட்டுமான புமி, பெருங்கடல்களை சீனாவே ஆளும் நாள் தொலைவில் இல்லை எனக் கூறப்படுகிறது.

மஞ்சள் கடலை நோக்கி விரிந்திருக்கும் டாலியன் கப்பல் தளம், சீனாவின் இராணுவ மற்றும் வர்த்தக ஆற்றலின் சின்னமாக மாறியுள்ளது. ஓய்வூதியதாரர்கள் கூட “சோசலிசம் நல்லது!” என பாடி பெருமிதம் கொள்வதோடு, கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சியைச் சிறப்பித்து குரல் கொடுக்கிறார்கள்.

ஆனால், வாஷிங்டனில் அமெரிக்க அதிகாரிகள் வேறு கண்ணோட்டத்தில் பார்க்கிறார்கள். அவர்கள் கணிப்பில், டாலியனில் எழுந்திருக்கும் இந்த கப்பல் கட்டுமானத் தொட்டில், சீனா தனது கடற்படை ஆற்றலை வேகமாக விரிவுபடுத்துவதை மட்டுமல்லாமல், அமெரிக்காவின் ஆசிய-பசிபிக் ஆதிக்கத்திற்கே சவால் விடுக்கும் அடையாளமாகவும் உள்ளது.

விமானந்தாங்கிகள், அழித்துக்கப்பல்கள், உளவுக் கப்பல்கள் என தொடர்ச்சியாக கடலில் இறங்கும் சீனக் கப்பல்கள், அடுத்த சில ஆண்டுகளில் சீனாவை “மீன்களை விட கப்பல்கள் அதிகம் மிதக்கும் நாடாக” மாற்றக்கூடும் என பாதுகாப்பு வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.

பரிந்துரைகள்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked with *

அண்மை

சிறந்த ஆசிரியர்கள்

அதிக கருத்து

காணொளிகள்

வகையினம்