ஜொகூர் மாநில அரசியலில் சமீபத்தில் எழுந்த விவாதங்கள், அரசியல் தலைவர்களின் பொறுப்புணர்வையும், சுல்தான் இப்ராகிம் இப்னி அல்மார்கும் சுல்தான் இச்கந்தர் அவர்களின் 2023 சட்டமன்ற உரையில் வலியுறுத்திய ஆணையை மதிக்கும் உண்மையான மனப்பாங்கையும் கேள்விக்குட்படுத்துகின்றன என ஜொகூர் கூலாய் தொகுதி மலாய்காரர் அல்லாத பிரிவின் தலைவரான திரு சந்திர சேகரன் தெரிவித்தார்
ஜொகூர் மாநில அரசியலில் சமீபத்தில் எழுந்த விவாதங்கள், அரசியல் தலைவர்களின் பொறுப்புணர்வையும், சுல்தான் இப்ராகிம் இப்னி அல்மார்கும் சுல்தான் இச்கந்தர் அவர்களின் 2023 சட்டமன்ற உரையில் வலியுறுத்திய ஆணையை மதிக்கும் உண்மையான மனப்பாங்கையும் கேள்விக்குட்படுத்துகின்றன என ஜொகூர் கூலாய் தொகுதி மலாய்காரர் அல்லாத பிரிவின் தலைவரான சந்திர சேகரன் கூறினார்.
சுல்தானின் தெளிவான ஆணை
ஜொகூர் சுல்தான், மாநில சட்டமன்ற கூட்டத்தொடரில், “ஆளும் கட்சி – எதிர்க்கட்சிகள் எனப் பிரிந்து விமர்சனங்களில் சிக்காமல், மக்களின் நலனுக்காக சமச்சீர் ஒற்றுமை அரசாங்கமாக இயங்க வேண்டும்” என்று வலியுறுத்தினார். மேலும், இந்தக் கொள்கையை மீறி, அரசியல் வாக்குவாதங்களில் நேரத்தையும் வளங்களையும் வீணாக்குவதை அரண்மனை சகிக்காது என்றும் அவர் எச்சரித்தார்.ஆனால், அண்மையில் சில தலைவர்களின் அறிக்கைகள், அந்த ஆணை மறக்கப்பட்டிருக்கிறதா என்ற கேள்வியை எழுப்புகின்றன என சந்திர சேகரன் தெரிவித்தார்.
சந்திர சேகரனின் நினைவூட்டல்
, “அரசாங்கத்தில் இருப்பவர்கள் பதவிக்காக மட்டுமே அல்ல, மக்களின் நலனுக்காகச் செயல்பட வேண்டும். இல்லையெனில் ஒற்றுமை அரசாங்கத்தின் அர்த்தமே மங்கிவிடும்,” என்றார் சந்திர சேகரன்.
கட்சி உள்கட்டமைப்பில் முரண்பாடு
அமானா கட்சியின் மாநில துணைத் தலைவர் டாக்டர் சுயான் சைன், 16வது பொதுத் தேர்தலில் மாற்றங்கள் வரலாம் என சுட்டிக்காட்டி, “அம்னோ தொடர்ந்து ஒற்றுமை அரசாங்கத்தில் இருக்குமா?” என்ற கேள்வியை எழுப்பினார்.இதற்கு பதிலாக பி.கே.ஆர் இளைஞர் தலைவர் ஃபாசுதீன் புவாட், அமானா தலைவரின் கருத்தை தற்காத்தார்.ஆனால் அம்னோ இளைஞர் தலைவர் அஸ்ஸாமின் பின் அம்ப்ரோஸ், இருவரின் கருத்தையும் “பொய்யானது” என நிராகரித்து, தேர்தலுக்கு முன்பே உரிமைகோரலில் அவசரம் காட்டுவதாக குற்றஞ்சாட்டினார்.
இந்த பரிமாற்றம், சுல்தானின் சமச்சீர் அரசாங்கக் கொள்கையை புறக்கணிக்கும் போக்காகவே தெரிகிறது என்றார் சந்திர சேகரன்
அரசியல் முன்னுரிமைகள் எதற்கு?
இன்றைய மலேசிய சமுதாயம் எதிர்கொள்ளும் உண்மையான சவால்கள்:
- விலைவாசி உயர்வு
- வேலைவாய்ப்பு குறைவு
- வீட்டு விலை உயர்வு
- பொதுமக்கள் வாழ்க்கைத் தரச் சிக்கல்கள் (வாகன நெரிசல், வெள்ளம், சாலை விபத்துகள், மாணவர் பகடிவாதம், இயற்கை பேரிடர்கள்)
இந்த பிரச்சனைகளைச் சமாளிக்க அரசாங்கம் செயல்பட வேண்டிய நிலையில், சில அரசியல் தலைவர்கள் அதிகாரப் போட்டியில் மூழ்குவது, மக்களின் நம்பிக்கையை பாதிக்கக்கூடியது.
தேசிய ஒற்றுமையின் தேவை
நாடு சுதந்திரம் அடைந்து 68 ஆண்டுகள் கடந்த நிலையில், தேசிய கொடியின் (ஜாலூர் கெமிலாங்) மதிப்பு குறைந்து போகிறது என்பதே மிகப் பெரிய ஏமாற்றம். அரசியல் கட்சிகள் குற்றச்சாட்டு – பதிலடி அரசியலில் மாட்டாமல், மக்களிடையே ஒற்றுமை, மத நல்லிணக்கம், மற்றும் தேசிய உணர்வை வலுப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட வேண்டும்.
 
																				



















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *