
கோலாலம்பூர், செப்டம்பர் 4 — 2020 முதல் இந்த ஆண்டு ஜூலை வரை அரசியல்வாதிகளைச் சேர்ந்த மொத்தம் 60 குற்ற விசாரணை ஆவணங்களில் 41, கூடுதல் நடவடிக்கை இல்லை (No Further Action – NFA) என வகைப்படுத்தப்பட்டுள்ளதாக பிரதமர் துறை (சட்டம் மற்றும் நிறுவன சீர்திருத்தம்) அமைச்சர் டத்தோஸ்ரீ அசாலினா ஓத்மான் சையத் தெரிவித்துள்ளார்.
READ MORE
கோலாலம்பூர், செப்டம்பர் 9, 2025 – மலேசியாவின் முதல் பெண்கள், சமாதானம் மற்றும் பாதுகாப்பு தேசிய செயல் திட்டம் (NAP-WPS) 2025–2030 ஐ துணை பிரதமர் டத்தோ ஸ்ரீ பதில்லா யூசுப் இன்று அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தினார். இதே நேரத்தில் 2025 ஆம் ஆண்டுக்கான ஆசியான் பெண்கள், சமாதானம் மற்றும் பாதுகாப்பு உச்சிமாநாடும் கோலாலம்பூரில் தொடங்கியது.
READ MORE
கோலாலம்பூர், செப்டம்பர் 7 – நாட்டில் நடைபெற்று வரும் நீதித்துறை செயல்முறைகளை மதிக்குமாறு பொதுமக்களை அட்டார்னி ஜெனரல் சாம்பர்ஸ் (AGC) வலியுறுத்தியுள்ளது. குறிப்பாக, ஜூலை 17 அன்று உயிரிழந்த சாரா கைரீனா மஹாதீர் மரணத்திற்கான விசாரணை (inquest) தொடர்பாக எந்த விதமான மிரட்டல்களும் சகித்துக்கொள்ளப்படாது என AGC எச்சரித்துள்ளது.
READ MORE
கூச்சிங், செப்டம்பர் 7 — யாயசான் சரவாக் இன்டர்நேஷனல் செகண்டரி ஸ்கூல்ஸ் (YSISS) நிறுவப்பட்டதன் நோக்கம், எலீட் தரப்புக்காக அல்ல, மாறாக புறநகர் மற்றும் குறைந்த வருமான (B40) மாணவர்களுக்கு உயர்தர கல்வி வாய்ப்புகளை வழங்குவதாக துணை கல்வி, புதுமை மற்றும் திறன் மேம்பாட்டு அமைச்சர் டத்தோ டாக்டர் அன்வார் ரபாயீ தெளிவுபடுத்தினார்.
READ MORE
கோட்டகினபாலு, செப்டம்பர் 7 — சபாவில் அரசியல் பரப்பில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில், பார்ட்டி கெமிலாங் அனக் சபா (GAS) தனது வேட்பாளர்களை டெண்டர் முறையின் மூலம் தேர்வு செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது.
READ MORE
செப்டம்பர் 7 – 2022 ஆம் ஆண்டின் பொதுத் தேர்தலில் ஒற்றுமைக் கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்திருந்த ம.சீ.ச., அப்போது ம.இ.காவுடன் இணைந்து சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிடமாட்டோம் என்று அறிவித்தது. கெடா, கிளாந்தான், திரங்கானு, பினாங்கு, சிலாங்கூர், நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தல்களில் கூட தங்கள் பாரம்பரியத் தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தாமல் பாரிசான் சார்பாகவே செயல்படுவோம் எனக் கூறியிருந்தது. ஆனால் நடைமுறையில் அந்தத் தொகுதிகளில் பக்காத்தான் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டதால் இரு கட்சிகளும் அரசாங்கப் பதவிகளில் பங்கேற்காமல் விலகின.
READ MORE



